சர்வதேச குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குருநகர் மேற்கு கிராம அப...
சர்வதேச குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குருநகர் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் குருநகர் இளையோர் மன்றம், குருநகர் நலன்புரி சங்கம்,மாவட்ட இளைஞர் சம்மேளனம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்கள் பொது அமைப்புகள் பங்களிப்புடன் 30 நாட்களில் 1000 குருதி கொடையாளர்களை இணைக்கும் "இரத்ததான முகாம்"செயற்றிட்டம் 09/06/2021 யாழ்ப்பாண இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ச.சந்தோஸ் வழிகாட்டலில் குருநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர மேஜர் கௌரவ.விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.அங்கஜன் இராமநாதனின் யாழ்-நல்லூர் இணைப்பாளர் திரு.பிரதாப் அவர்களும் குருநகர் யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி.யாவிஸ் அடிகளாரும் யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் உதவிப்பணிப்பாளர் திருமதி.விநோதினி சிறிமேனன் அவர்களும் யாழ் நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் ,j/69 கிராம அலுவலகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், இரத்த வங்கி வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள்,குருநகர் மேற்கு கிராம அபிவிருத்தி தலைவர் செயலாளர்,யாழ்ப்பாண.பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்,Joy Makers நிறுவன உறுப்பினர்கள்,Lions Club of Jaffna City உறுப்பினர்கள்,யாழ்.பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் நிகழ்வு காலை 9 மணியளவில் ஆரம்பமாகி 12.30 மணியளவில் 30 குருதி கொடையாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டது.