கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கடலை, சீனர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கடலை, சீனர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கௌதாரிமுனை கடலில், சீனா நாட்டை சேர்ந்தவர்கள், எந்த அனுமதியும் இன்றி, கடல் அட்டை பண்ணை நடத்தி வருகிறார்கள் எனவும், அதனால், தமது கடலை சீனா நாட்டவர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு, கௌதாரிமுனை மீனவர்களும் மக்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கடலட்டை பண்ணை தொடர்பாக, பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் வினவிய போது, கடலட்டை பண்ணைக்கு, தம்மிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.