இரண்டாம் இணைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை நடத்தவிருந்த விசேட சந்திப்பு திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந...
இரண்டாம் இணைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை நடத்தவிருந்த விசேட சந்திப்பு திடீரென பிற்போடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பை ஜனாதிபதி தரப்பு இரத்து செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு புதிய திகதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளை (16) மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைய, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
அதேவேளை, நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.