யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில், குறிப்பிட்ட நபரை பார்த்து, தான் ‘நாய்’ என கூறியிருந்தால், அதனை நிருபித்துக் காட்ட வேண்டும் என, தமிழ்த் தேசிய...
யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில், குறிப்பிட்ட நபரை பார்த்து, தான் ‘நாய்’ என கூறியிருந்தால், அதனை நிருபித்துக் காட்ட வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற, யாழ். மாநகர சபை அமர்வில், சக உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி, ‘நாய்’ என விழித்து பேசியதாக, உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை, ஒரு மாத காலத்திற்கு, சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுளது.
இந்த விடயம் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், இன்று இடபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.