கொழும்பிலுள்ள அரச பொறியியலாளர் கூட்டுதாபனத்திற்கு அருகில் முன்னிலை சோஷலிச கட்சி இன்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தது. இவ்வாறு...
கொழும்பிலுள்ள அரச பொறியியலாளர் கூட்டுதாபனத்திற்கு அருகில் முன்னிலை சோஷலிச கட்சி இன்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தது.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, கொழும்பு − கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளுனர்.
எனினும், இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக, பல்லேகெலே தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்போது, தனிமைப்படுத்தலுக்கு செல்ல முடியாது என கூறிய பெண்ணொருவருக்கு, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது காலினால் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.