தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை 30ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பமாகும் என சுகாதார...
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை 30ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பமாகும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டை முடக்கிவிட்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உலக நாடுகள் அனைத்தும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே இம்முறை நாடு முடக்கப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
உலகின் முன்னணி நாடுகள் பலவும் நாட்டை முடக்கிவிட்டு முன்னேறிச் செல்வது கடினமென்றும், நாடு திறக்கப்பட வேண்டும் என்பதோடு, சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிக்கலாமா, தளர்த்தலாமா என்பது தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நாளை கூடவுள்ள கொவிட் தடுப்பு செயலணி குழு கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.