கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிற...
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு முதல் குறித்த சரீரங்கள் அடையாளம் காணப்படாது இவ்வாறு தேங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதன் காரணமாக வைத்தியசாலைகளின் பிரேத அறையில் தேங்கியுள்ள சரீரங்கள் காரணமாக நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
40 சரீரங்கள் 2017 ஆம் ஆண்டு முதல் தேங்கியுள்ள நிலையில், அவை ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாதவை என மருதானை பொலிஸாரினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவிருந்ததை தொடர்ந்து குறித்த சரீரங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.