4 ஆயிரத்து 96 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட சீனி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் பதிவு செய்யாமல் வத்தளை கெரவலப்பிட்டி பகுதியில் உ...
4 ஆயிரத்து 96 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட சீனி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் பதிவு செய்யாமல் வத்தளை கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு களஞ்சியத்தில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் களஞ்சியத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த களஞ்சியத்தில் பல மாதங்களாக சீனி இருப்பு இருந்தது தெரியவந்தது.
சந்தையில் சீனியின் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி, பாவனையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்க வரம்பற்ற இலாபம் ஈட்டுவதற்காக இறக்குமதியாளர் சீனியை இருப்பு வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.