நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தினாலும் கொரோனா மரணங்கள் 48.8 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்...
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தினாலும் கொரோனா மரணங்கள் 48.8 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமெனில், அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்வதை தவிர்ப்பதோடு, சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தான் கருத்து தெரிவிப்பதில் எதுவும் மாறப்போவதில்லை எனவும், தீர்மானம் எடுக்கவேண்டியவர்கள் சரியான தீர்மானத்தை மேற்கொள்வது அவசியம் எனவும், எவ்வாறாயினும், நாடு தற்போது ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.