யாழ்ப்பாணத்திற்கு 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காளவிரிகுடாவின் கடற்பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இ...
யாழ்ப்பாணத்திற்கு 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காளவிரிகுடாவின் கடற்பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அதன் தாக்கத்தால் சென்னையின் சில இடங்களில் உணரப்பட்டுள்ளதாக இந்திய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 296 கிலோமீற்றர் கிழக்கு திசையில், சென்னைக்கு சுமார் 322 கிலோமீற்றர் தொலைவில் வங்கக் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.