நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது. நேற்றைய தினம் (20) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 1...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.
நேற்றைய தினம் (20) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.