நாட்டில் கொரோனா நிலைமை எதிர்வரும் தினங்களில் மேலும் தீவிரமடையுமானால், நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என ஶ்ரீலங்கா ...
நாட்டில் கொரோனா நிலைமை எதிர்வரும் தினங்களில் மேலும் தீவிரமடையுமானால், நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை முழுமையாக தற்போது முடக்குவது எளிதானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தொற்றிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால், நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.