இன்று (2021.08.11) சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீனவர் இளைப்பாறு மண்டபம் கடல்வளத்துறை அமைச...
இன்று (2021.08.11) சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீனவர் இளைப்பாறு மண்டபம் கடல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
2020.02.09 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட இக் கட்டடமானது 2மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்க இந் நிகழ்வில் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர், சங்கானை பிரதேச செயலர், கடல்வளப் பரிசோதகர் மற்றும் மீனவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.