கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை இந்த அரசாங்கம் மக்களுக்காக செய்து வருகின்றது - வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் மெகா திட்ட...
கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை இந்த அரசாங்கம் மக்களுக்காக செய்து வருகின்றது - வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் மெகா திட்டம்:
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வடக்கு கிழக்கை சார்ந்த பதினாறுக்கும் மேற்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகளுக்கு தீர்வு மற்றும் இராணுவத்தினரின் வசமிருந்த மக்களின் வாழ்வாதார காணிகள் மற்றும் மக்கள் குடியிருப்பு காணிகள் தொடர்பில் தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கைகள் விடுத்து கைகளை தூக்கி அரசாங்கத்துக்கு ஆதரவளித்த போதும்; வடக்கு கிழக்கு மக்களுக்கு எதுவும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை
ஆனால் இன்று கோடபய ராஜபக்ஷ ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் ஓரளவேனும் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளுக்கான வேலைத்திட்டம் இடம்பெற்று வருவதாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று மட்டகளப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தன்னாமுனை பிரதேசத்துக்கான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்குகையில் இன்று மட்டகளப்பு மாவட்டத்தினை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனால் மத்திய அரசாங்கத்தின் கனிசமான நிதியை கொண்டு மட்டகளப்பு மாவட்ட மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க கூடியதாக உள்ளது
இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகள் கோவிட் 19 தொற்று காரணமாக பாரிய பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வரும் சந்தர்ப்பத்தில் எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க கூடியதாக இருக்கின்றது கோவிட் 19 தொற்று முதலாம் இரண்டாம் அலையை போன்று அல்லாது மூன்றாம் நான்காம் அலைகள் சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றது நாங்கள் கண்ணுக்கு தெரியாத நோய்கிருமிகளுடன் போராடுகின்றோம்
அத்துடன் நாட்டின் சகல துறைசார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கோடபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் மக்களுக்கு தேவையான அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகவும் மட்டகளப்பு மாவட்டத்தில் மாத்திரம் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் ஒரு கட்டமாகவே மட்டகளப்பு மாவட்டத்தில் குடி நீர் பிரச்சினை காணப்படும் அனைத்து வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் மெகா திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்