ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபூலின் எல்லை பகுதியில் காத்திருக்குமாறு தாலிபான்கள், தமது போராளிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காபூல் நகரிலிருந்து வெளியேற பொதுமக்கள் விருப்பம் தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்க வேண்டாம் என தாலிபான்கள் கூறியுள்ளனர்.
காபூலில் மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளின் பாதுகாப்புக்கு, தற்போதைய ஆட்சியாளர்களே பொறுப்பு எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையில், ஆட்சியை தம்மிடம் ஒப்படைக்குமாறும் தாலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தலைநகரம் காபூல் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை எனவும், மக்களை நம்பிக்கையுடன் இருக்குமாறும் அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.