இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், பிராணவாயு அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிக...
இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், பிராணவாயு அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைகத்தில் இந்தப் பணிகள் இடம்பெறுகிறது.
பெரும்பாலும் இன்றைய தினம் குறித்த கப்பல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்தம் 120, 000 லீற்றர் திரவ மருத்துவ பிராணவாயுவைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த, அமைச்சரவை முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், மேலும் 360, 000 லீற்றர் திரவ மருத்துவ பிராணவாயுவை இறக்குமதி செய்ய இந்த வாரம் அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.