கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட A 32 பிரதான வீதியில் இருந்து கிராஞ்சி ,வேரவில்,வலைப்பாடு,பொன்னாவெளி ,வலைப்பாடு ஆகிய கிராமங...
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட A 32 பிரதான வீதியில் இருந்து கிராஞ்சி ,வேரவில்,வலைப்பாடு,பொன்னாவெளி ,வலைப்பாடு ஆகிய கிராமங்களை இணைக்கும் பல்வராஜன்கட்டு_வலைப்பாடு பிரதான வீதி புனரமைப்பிற்காக ஒப்பந்தக்காரர்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்ட போதும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கபடாமல் இடைநடுவில் ஒப்பந்தக்காரர்களால் கைவிடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்காரணமாக மேற்படி கிராமங்களில் உள்ள கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகள்,பாடசாலை மாணவர்கள்,நோயாளர் காவு வண்டி என பலதரப்பட்ட மக்களினதும் அன்றாட வாழ்விற்கு பிரச்சினையாக உள்ளது.
மேலும் மழைகாலங்களில் இவ்வீதியால் பயணிப்பதும் தமக்கு பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் இது தொடர்பாக தமது பிரதேச அரச அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி தமது வீதியை வெதுவிரைவில் புனரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.