அரசாங்கத்தில் இருந்து பிரிந்து எதிர்வரும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ...
அரசாங்கத்தில் இருந்து பிரிந்து எதிர்வரும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மேலும் மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரில் பெரும்பாலும் கூட்டணி ஆரம்பிக்கப்படும் என்றும் சுதந்திக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.