இந்திய மருந்து நிறுவனமான சைடஸ் கெடிலாவின் (Zydus Cadila) தடுப்பூசி ஜிகோவ்-டிக்கு (Zycov-D) இந்தியாவின் ஒழுங்குபடுத்தல் நிறுவனம் அனுமதி வழங்க...
இந்திய மருந்து நிறுவனமான சைடஸ் கெடிலாவின் (Zydus Cadila) தடுப்பூசி ஜிகோவ்-டிக்கு (Zycov-D) இந்தியாவின் ஒழுங்குபடுத்தல் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகின் முதலாவது மரபணு சார் தடுப்பூசியாக இது விளங்குகின்றது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் தடுப்பூசிக்காக அமைக்கப்பட்ட பொருள் வல்லுநர் குழு, கொரோனாவிற்கான அவசர பயன்பாட்டிற்கு ஜைடஸ் கொடிலாவின் தடுப்பூசியை (Corona Vaccine) பரிந்துரைத்துள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்குப் பிறகு இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசியாக Zycov D இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில், சைடஸ் கொடிலா தடுப்பூசி DNA அடிப்படையிலான முதல் தடுப்பூசி ஆகும். வைரஸ் பிறழ்வு ஏற்பட்டால் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி உருவாக்கம் எளிதில் மாற்றியமைக்கப்படும்.
வயது வந்தவர்களுக்கும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அவர்களுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்தமுடியும்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து வயது வந்தவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற இந்தியா எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்தடவையாக தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது. சிக்கோ டி என்ற இந்த தடுப்பூசியை மூன்று தடவைகள் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.