கொழும்பிலுள்ள 03 முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 99 வருட குத்தகை அடிப்படைய...
கொழும்பிலுள்ள 03 முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
99 வருட குத்தகை அடிப்படையில் முதலீட்டுத் திட்டங்களுக்காகக் கொழும்பு நகரத்தில் மேலும் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை அழைப்பு விடுத்துள்ளது.
அந்தச் சபை இதற்கான விளம்பரங்களை செப்டெம்பர் 19 ஆம் திகதி அன்று வெளியிட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
கலப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்காக கொழும்பு டி.ஆர் விஜேவர்தன மாவத்தையில் 03 இடங்களை வழங்குவதற்காகக் குத்தகை கோரப்பட்டுள்ளது.