யாழில் நேற்றைய தினம் மட்டும் 199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்தின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 15037 ஆக உயர்வடைந...
யாழில் நேற்றைய தினம் மட்டும் 199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்தின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 15037 ஆக உயர்வடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் நேற்றைய சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 67 தொற்றாளர்களும் அன்டியன் பரிசோதனையில் 132 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆகவே யாழ் மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.