05.02.1918 ஆம் ஆண்டு பிறந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் சிறு வயது முதல் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துப் அதன் பயனாக முதன் முதலில் உடுவில் கிராம...
05.02.1918 ஆம் ஆண்டு பிறந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் சிறு வயது முதல் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துப் அதன் பயனாக முதன் முதலில் உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இப் பதவியில் ஐந்துக்கு மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக இருந்தார் அதனைத் தொடர்ந்து சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.
1960ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அன்றில் இருந்து 1983 ஆம் ஆண்டு வரை வரை பாராளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்ததுடன் தான் போட்டியிட்ட அத்துனை தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற அளவுக்கு மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்றவர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்கள்!
02.09.1985ல் மரணித்த தமிழரசு கட்சிஇ தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும், உடுவில் - மானிப்பாய் தொகுதியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரும்இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தந்தையாருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று...