வீட்டில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டவர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். யாழ் சங்கானை பகுதியில் வீடு ஒன்றினுள் மறை...
யாழ் சங்கானை பகுதியில் வீடு ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் சங்கானை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் உடமையில் இருந்து 140 லீற்றர் கசிப்பு மற்றும் உற்பத்தி பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.