யாழ்ப்பாணம் பாசையூரில் இடம்பெற்றுவரும் நகர்புற பூங்கா மறுசீரமைப்பு பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச பார்வையிட்டார். அரசாங்கத்தின் அனுசரணையில்...
யாழ்ப்பாணம் பாசையூரில் இடம்பெற்றுவரும் நகர்புற பூங்கா மறுசீரமைப்பு பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச பார்வையிட்டார்.
அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழ். விஜயம் அமைந்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், கௌரவ அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
கொவிட் 19 தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகளை அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.