ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இரண்டாவது ...
ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இரண்டாவது நாளாக இன்று அஞ்சலி செலுத்தினர்.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று மாலை 6 மணியளவில் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்த திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி மரணம் எய்தினார்.இவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.