யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (09) காலை பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய ந...
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (09) காலை பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்தவர்கள் குறித்த பெண்ணிற்கு தேனீர் கொடுக்கச் சென்ற போதே குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனங்கிளப்பு பகுதியைச் சேர்ந்த 60வயதான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.