தற்போது அமுலில் உள்ள தனிமைப்ப...
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட் கிழமை (21) தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையில் இன்று (17) காலை இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.