ஐநாவில் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் தமிழ் தரப்புக்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக அறிக்கையிடத் தயாராகுங்கள்.. அம்பலப்படுத்தினார் மனித உரி...
ஐநாவில் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் தமிழ் தரப்புக்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக அறிக்கையிடத் தயாராகுங்கள்..
அம்பலப்படுத்தினார் மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ..
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா அமர்வில் தமிழ் தரப்பு கள் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையில் சிங்கள சிவில் செயற்பாட்டாளர்களின் அறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை தமிழ் பிரதிநிதிகள் ஐநாவுக்கு அனுப்பியுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இணைய வழியிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு தாக்கத்தைச் செலுத்துவதற்கேற்ற விடயங்களை தமிழ்த் தரப்புகள் மேற்கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தையும் காப்பாற்றுவதற்காக? என்ற சந்தேகம் எழுகின்றது.
ஐநாவின் கூல செயற்படுகின்ற சிவில் அமைப்புகளில் 750க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து வேலை செய்கின்றனர்.
அவர்கள் அனுப்பும் அறிக்கைகளில் ஓ எம் பி அலுவலகத்தை தொடர்ந்து நடாத்திச் செல்ல முடியாமைக்கு நிதி தான் ஒரு காரணம் எனவும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பெரும்பாலான அரசாங்கத் தரப்பு விசாரணைகள் இடம்பெற்று முடிந்ததாகவும் அறிக்கை யிட்டுள்ளனர்.
இவ்வாறு அரசாங்கத்திற்கு சார்பாக அறிக்கைளை தயாரித்து சிங்கள சிவில் அமைப்புக்கள் ஊடாக அனுப்புகின்ற நிலையில்
தமிழர் தரப்புகக் கட்சிகள் 4அறிக்கைகளை அனுப்பிவிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகிறோம் என கூறுவது வேடிக்கை.
ஐநா கூட்டத்தொடருக்கு அனுப்பப்படும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலான அறிக்கைகள் பெரும்பாலும் சிவில் அமைப்புக்களின் அறிக்கைகள் தான் காத்திரமான பங்கை வகிக்கும்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கையிடப்பட்ட நிலையிலும் தமிழ்த் தரப்புக்களால் 300 உற்பட் அறிக்கைகள் மட்டும் அனுப்பப்ப ட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் தரவுகளை தமிழ் தரப்புக்கள் உரிய வகையில் ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகும்.
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு சிங்கள சிவில் அமைப்புகள் பல தமிழ் அரசியல் தரப்புக்களையும் தம்மோடு இணைத்து செயற்படுத்திக் கொண்டுவருவதை தமிழ் மக்கள் நன்கு அறிய வேண்டும்.
தமிழ் கட்சி ஒன்று ஆதரவு தெரிவித்த "டிறக்கி றிசோசஸ்"என்ற அறிக்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்ற வசனம் கூட இல்லாத நிலையில் அதில் எங்கோ ஒரு மூலையில் ஒரு விடயத்தை எடுத்து தமது அறிக்கையாக தமிழ்க் கட்சி ஒன்று அனுப்பியுள்ளது.
இத்தகைய செயற்பாடுகள் எமக்கு மிகுந்த மனவதனையைத் தருவதாக அமைவதோடு தமிழ் மக்களுடைய பிரச்சினையை நீர்த்துப்போக வைப்பதற்கு தமிழ் காட்சிகளே முன் நிற்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் இனம் நீதிக்காகக் காத்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என ஐநா செல்பவர்கள் முதலில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான தகுந்த ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
இம்முறை ஐநா மனித உரிமை ஆணையாளரின் வாய் மூலமான அறிக்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான விடயங்களை பெரிதாக அவர் அலட்டிக்கொள்ளவில்லை.
ஏனெனில் ஐநாவில் தமிழர் தரப்புக்களால் வழங்கப்படுகின்ற சாட்சியங்கள் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில் ஆணையாளரின் பார்வை குறைவாகவே பார்க்கப்படும்.
ஆகவே தமிழ் மக்களுக்கு இவற்றையெல்லாம் மறைத்து நாங்கள் ஐநாவில் தீர்வைப் பெற்றுத் தரப் போகிறோம் எனக்கூறி பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்தும் நீதிக்காக போராடும் வர்களாக வைத்திருப்பதற்கு தமிழ் கட்சிகள் எதிர்பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.