போர் இடம்பெற்ற பின் அரசியலுக்கு வந்த அங்கஜன் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசுவதற்கு தகுந்தவர் அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுர...
போர் இடம்பெற்ற பின் அரசியலுக்கு வந்த அங்கஜன் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசுவதற்கு தகுந்தவர் அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அங்கஜன் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அவர் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் தேசிய கட்சிகள் ஐநாவுக்கு அறிக்கை அனுப்புவது தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகம் என கருத்து தெரிவித்துள்ளதாக அறிந்தேன்.
பல கோடிகளைப் பெற்று பல இளைஞர்களை ஏமாற்றி இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.
ஆகவே தமிழ் மக்களின் உரிமை தொடர்பிலோ ஐநா தொடர்பிலோ கருத்து தெரிவிப்பதற்கு தகுந்தவர் அவர் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.