பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ரிஷாட் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.