நியூசிலாந்தில் ஒக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான...
நியூசிலாந்தில் ஒக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முகமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989ஆம் ஆண்டு பெற்றோருக்கு இளைய மகனான பிறந்த முகமது சம்சூதீன் ஆதிலுக்கு ஒரு சகோதரியும், 2 சகோதாரன்களும் உள்ளனர்.
இவர் ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் பயின்று 2006ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளான். இவரின் தந்தை மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்த நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்து வருவதன் காரணமாக இவரும் கனடாவில் குடியேறி வாழ்ந்து வருவதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இதேவேளை ஆதிலின் மற்றொரு சகோதாரன், கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்து வருதாகவும், மற்றைய சகோதரன் சவூதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு ஆதிலின் தாயார் காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முகமது சம்சூதீன் ஆதில் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை நியூசிலாந்து பொலிஸார் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்த நிலையில் நேற்று சுட்டுக்கொன்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம் : தமிழன் இணையம்