வலிவடக்கு நல்லிணக்க புரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு கொலையே என யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ...
வலிவடக்கு நல்லிணக்க புரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு கொலையே என யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நல்லிணக்க புரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காங்கேசன் துறைப் பொலிசார் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை என தெரிவித்து இறந்தவரின் உறவினர்கள் பொலிஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களின் பெயர்களைக் கூறி அவர்கலே கொலைக்கான சூத்திரதாரிகள் அவர்களை கைது செய்ய வேண்டும் என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து பொலிசார் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் நிறுத்தப்பட்டதுடன் பொலிசார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்றய தினம் சனிக்கிழமை பொலிசாரின் அறிக்கை வழங்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையில் உயிரிழந்த நபரின் தலையில் சுத்தியலை ஒத்த ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கைமயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.