இலங்கை அணியுடனான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் 9 விக்கெட்களினால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி இருபதுக்கு 20 சர்வதேச தொடரை தன...
இலங்கை அணியுடனான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் 9 விக்கெட்களினால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி இருபதுக்கு 20 சர்வதேச தொடரை தன்வசப்படுத்தியது.
சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதல் தொடரான ஒருநாள் சர்வதேச தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த தொடரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.
இந்;நிலையில் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசால் பெரேரா அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றார். ஏனைய வீரர்கள் அனைவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை.
104 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 14.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. குறித்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.