கடலில் இந்தியப படகு பாதிக்கப்பட்டமைக்கு இலங்கை கடற்படை காரணமாக விளங்குகின்ற நிலையில் உயிர் தப்பிய இரு மீனவர்களினால் பல உண்மைகள் வெளிவரும் எ...
கடலில் இந்தியப படகு பாதிக்கப்பட்டமைக்கு இலங்கை கடற்படை காரணமாக விளங்குகின்ற நிலையில் உயிர் தப்பிய இரு மீனவர்களினால் பல உண்மைகள் வெளிவரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
இலங்கை கடற்படையினர் அன்மையில் தீவகத்தில் இந்திய படகுகள் பாதிக்கப்பட்டதற்க்கு இலங்கை கடற்படை காரணமாக விளங்குகின்ற நிலையில் கடற்படையால் கைது செய்யப்பட்ட இருவரும் தாயகம் திரும்பிய பின்னரே உண்மை நிலையை கண்டறிய முடியும் .
பெரிய கப்பல்கள் வருகிறது என்றால் சின்ன படகுகளை கவனிக்காமல் மோதுகிறார்கள் என்பது அர்த்தம்.
கற்களை வைத்துக் கொண்டும் போத்தில்களை வைத்துக்கொண்டும் உடைப்பதும், அடிப்பதும்,
மீன்களைப் பறிப்பதும்,கொல்வதும் உங்கள் வேலை அல்ல.
தமிழ்நாட்டினுடைய உயிரிழந்த குடும்பங்களுக்கு எங்களுடைய ஏழ்ந்த அனுதாவங்களையும் கவலைகளையும் தெரிவித்துக் கொள்கிறேம்.
தென்னிலங்கையிலிருந்து வந்தும் எமது பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்
ஆக்கிரமிப்பு பலவழிகளிலும் வருகிறது. கடலட்டை என்று வடமராட்சி கிழக்கில் ஆக்கிரமிக்கிறார்கள்அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
,
இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு
நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும்.
இலங்கை மீனவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமை இலங்கை அரசுக்கும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமை இந்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உரியது.
ஆகவே எவரும் நடுக்கடலில் மோதி இந்தத்தரப்பு அந்த தரப்பு காயப்படவோ பிடிச்சுக்கொண்டுவரவோ இழுத்துக் கொண்டுவருவதாலோ பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
ஆகவே எங்களுக்காக உரத்து குரல் கொடுக்கின்ற தமிழக மக்கள்
அவர்களுடைய போராட்டம் தான் எங்களுக்கு அடிநாதம் அவர்களுடைய ஆதரவுதான் அடிநாதமாக இருக்கிறது.
ஆகவே மீனவர் பிரச்சனையை வைத்து எங்களிடமிருந்து திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது.
அகவை சட்ட திருத்தங்களை செய்து இங்கிருக்கக் கூடிய அடிமடி தொழிலை தடை செய்யுங்கள்.
இழிவைப்படகு தொழிலை விஞ்ஞான ரீதியாக அனுமதிக்கப்பட்ட விதத்திலே அனுமதியுங்கள் தவறினால் தண்டியுங்கள்.
இது ஒரு சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சன என அவர் மேலும் தெரிவித்தார்.