இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு யாழில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கலாசார நிலையம் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வெகுவிரைவில் திறந்துவைக்க...
இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு யாழில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கலாசார நிலையம் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வெகுவிரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தைப் பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இதன்போதுஇ ஏற்பாடு செய்யப்பிட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நகரின் மத்தியில் மிகப் பிரம்மாண்டமான மண்டபமாக இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு இந்த கலாச்சார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய நிலையமானது வெகு விரைவில் இலங்கை அரசின் பங்களிப்புடன் திறந்து வைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கட்டடத்தின் பராமரிப்பு செலவினையும் இந்தியாவே பொறுப்பேற்கவுள்ளது. அத்தோடு இலங்கைக்கு இந்தியா பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டினார்.
இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தைச் சுற்றிப் பார்வையிட்டார். அவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேஇ யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அவரது வருகையை முன்னிட்டு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் பாதுகாப்புகளும் இருக்கப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.