யாழ் மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவுக்காக 186 குடும்பங்களுக்காக சுமார் 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்...
யாழ் மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவுக்காக 186 குடும்பங்களுக்காக சுமார் 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணி அற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்காற உறுதிகள் வழங்கும் நிகழ்வில் ஆரம்ப உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்ட செயலகத்தால் காணியற்ற குடும்பங்களுக்காக அரச நிதியில் காணி கொள்வனவு செய்து வழங்கும் செயற் திட்டத்திற்கு அமைய 186 குடும்பங்களுக்கு இரண்டு பரப்பு வீதம் கொள்வனவு செய்வதற்காக 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் கணக்கெடுப்பின் பிரகாரம் இன்னும் சுமார் 126 குடும்பங்களுக்கு காணி வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.
அவர்களில் 46 குடும்பங்களுக்கு காணிகள் அடையாளப் படுத்தப் பட்டு வரும் நிலையில் விரைவில் அவர்களுக்கான காணிகள் வழங்கி வைக்கப்படும்.
காணி வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 10 லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளதோடு அவர்களுக்குத் தேவையான மலசலகூட வசதிகள் மின்சாரம் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
ஆகவே யாழ் மாவட்டத்தில் காணி ஏற்ற மக்களுக்காக கட்டங்கட்டமாக காணிகள் வழங்கி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலகம் மேற்கொண்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.