யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சடலங்கள் கரையொதுங்கும் நிலையில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சடலம் ஒன்று கரையொதுங்கியு...
யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சடலங்கள் கரையொதுங்கும் நிலையில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
ஒரு வாரத்தில் யாழ்.மாவட்டத்தில் கரையொதுங்கிய நான்காவது சடலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.