சர்வோதய ஸ்தாபகத் தலைவர் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்ணாவின் 90 ஆவது பிறந்தநாள் நிகழ்வு கோப்பாய் பிரதேச தேசோதைய சபை அலுவலகத்தில் கடந்த 5 ஆம் திகதி இடம...
சர்வோதய ஸ்தாபகத் தலைவர் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்ணாவின் 90 ஆவது பிறந்தநாள் நிகழ்வு கோப்பாய் பிரதேச தேசோதைய சபை அலுவலகத்தில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றது.
தேசோதைய சபை தலைவர் இ.மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த அச்சுவேலி மத்திய கல்லூரியில் 8ஏ புள்ளி எடுத்து பரீட்சையில் சித்திபெற்ற மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது. அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் த.தயாபரனின் நிதிப் பங்களிப்பில் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.