எதிர்வரும் 9ஆம் திகதி வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை ச...
எதிர்வரும் 9ஆம் திகதி வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ர விரிவுரையாளர் நாகமுத்து பிரதீப ராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையல்
கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது சிலாபத்திற்கு 67 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
குறித்த தாழமுக்கமானது தற்போது சிலாபத்திற்கு மேற்காக நிலை கொண்டிருப்பதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தொடர்ச்சியாக
இரண்டு நாட்களுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் ஏற்படப்போகும் தாழமுக்கத்திற்கு ஏதுவாக கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளதால் அதற்கான சூழ்நிலை அதிகமாக காணப்படுகிறது.
தாழமுக்கத்தின் தன்மை தொடர்பில் தற்போது விரிவாகக் குறிப்பிட முடியாத நிலையில் ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதனுடைய செயற்பாடுகள் தொடர்பில் கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.