“மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துவிட்டோம் என மார்தட்டிய அரசாங்கம் இன்று துண்டு துண்டாக உடையும் நிலையில் உள்ளது. மக்களுக்குத் துர...
“மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துவிட்டோம் என மார்தட்டிய அரசாங்கம் இன்று துண்டு துண்டாக உடையும் நிலையில் உள்ளது. மக்களுக்குத் துரோகமிழைத்த இந்த அரசாங்கம், ஆட்சி கவிழும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது. நாம் விரைவில் புதிய ஆட்சியை அமைத்தே தீருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிகையில்,
தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே மக்களின் ஆணையைக் காட்டிக்கொடுத்து விட்டது. அரசாங்கம் செல்லும் இந்த அழிவான பயணத்தை ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே பின்நோக்கித் திருப்ப முடியும்.
அரசால் அநீதி இழைக்கப்பட்ட விவசாயிகள், இன்று எம்மிடம் நீதி கேட்கின்றார். விரைவில் அமையவுள்ள எமது புதிய ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய நீதியை வழங்கியே தீருவோம் எனத் தெரிவித்தார்.