யாழ்.நகரில் உள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கொள்ளை ச...
யாழ்.நகரில் உள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவமானது கடந்த 1ம் திகதி அன்று யாழ். நகரில் 1ம் குறுக்குத் தெருவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த கொள்ளையின் போது ஆறு பவுண் நகையும், ஒரு தொகைப் பணமும் திருடி செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கபட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறையிட்டனர். குறித்த முறைப்பாடு தொடர்பில் இருவரை யாழ்.குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்புப் பரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளையுடைய நபர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து 6 பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.