வெடுக்கு நாறிமலையில் உள்ளது பௌத்தவிகாரையின் சிதைவுகளே என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நெடுங்கேணி வெடுக்குநாறி மலை...
வெடுக்கு நாறிமலையில் உள்ளது பௌத்தவிகாரையின் சிதைவுகளே என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் அதற்கு முன்னர் பௌத்த விகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாக அனுரமனதுங்க தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி வெடுக்குநாறி மலை தொடர்பான விடயம் நீதிமன்றத்தில் இருக்கின்றது அந்த பிரச்சினையில் நாம் ஏனைய பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் ஒலிபெருக்கியினை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை நாம் வழங்கியிருந்தோம் இதனால் அதிலும் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டிருப்பதை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அண்மைக் காலமாகவே இந்துக் கோவில் என்ற வகையில் அங்கு பூசைகள் இடம்பெற்று வருவதை எம்மால் அறியமுடிகின்றது இதற்கு முன்னர் பௌத்த விகாரைகளின் சிதைவுகள் அங்கு காணப்படுவதை அவதானிக்க கூடியதாகயிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.