சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டாது என சீன தூதரக அதிகாரிகளுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய...
சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டாது என சீன தூதரக அதிகாரிகளுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்தார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சீன உரக்கப்பல் தொடர்பில் விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கும் சீன தூதுவருக்கும் இடையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சீன தூதரக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
சர்சைக்குரிய சீன சேதனப் பசளை கப்பலின் ஏற்றுமதியாளர்களான சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்திருந்தது.
குறித்த சீன நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்காக இந்த நட்டஈட்டை கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பக்டீரியா உள்ளடங்குவதாக உறுதி செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட சீன சேதன உரத் தொகையை எடுத்து வந்த “HIPPO SPIRIT” என்ற கப்பல் தற்போது களுத்துறை – பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக , Marine Traffic எனும் இணையதளம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.