தமிழ் பேசும் கட்சிகள் அன்மையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என கூட்டத்துக்கு சென்ற எமது பிரதிநிதி ஒருவருக்கு பிரான்ஸ் நாட்டி...
தமிழ் பேசும் கட்சிகள் அன்மையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என கூட்டத்துக்கு சென்ற எமது பிரதிநிதி ஒருவருக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்தது உண்மைதான் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில்தான தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் 13ஆம் திருத்தத்தை ஓரணியில் வலியுறுத்துவோம் என்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு எமது பிரதிநிதி சென்றிருந்தார்.
அவர் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றி கொண்டிருந்தபோது பிரான்சில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் குறித்த கலந்துரையாடல் இருந்து வெளியேறுமாறு எமது பிரதிநிதியை மிரட்டும் தொணியில் அழைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எது எவ்வாறாக இருந்தாலும் அழைப்பை மேற்கொண்டவர் என்னுடன் கலந்துரையாடி இருக்க வேண்டும் அவ்வாறு கலந்து உரையாடாமல் என் சார்பில் சென்ற பிரதிநிதியை மிரட்டியது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.