தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்மாவட்ட இராணுவ படைகளின் கட்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்மாவட்ட இராணுவ படைகளின் கட்டளைத்தளபதிகொடித்துவக்கு ,இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திஸாநாயக்க ,வடமாகாண சபையின் பிரதம செயலாளர் பந்துலசேன வடமாகாண விசேட அதிரடிப்படையின் எஸ்.எஸ்.பி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பொங்கல் பொங்கி படையல் படைத்து,விளக்கேற்றி விசேடபூஜை வழிபாடுகளில் சமய நெறிமுறைப்படி கலந்துகொண்டு இருந்தனர்.இதனையடுத்து இராமநாதன் கல்லூரி மாணவர்களால் நடன நிகிழ்வுகளும்,பண்ணிசையும் இடம்பெற்றது,இந்நிகழ்வை கந்தசாமி கருணாகரன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.