வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் இன்று காலை காலமாகியுள்ளார். துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சி...
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் இன்று காலை காலமாகியுள்ளார்.
துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார்.
வேலுப்பிள்ளை சிவயோகனின் இறுதி கிரிகைகள் நாளை திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.