க்ளைபோசேட் உட்பட சில பீடை கொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தமை தொடர...
க்ளைபோசேட் உட்பட சில பீடை கொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தமை தொடர்பில் பீடை கொல்லி பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
5 பீடை கொல்லிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை நேற்றைய தினம் (22) பீடைக் கொல்லி பதிவாளர், பேராசிரியர் ஜே.ஏ சுமித் இரத்து செய்த காரணத்திற்காகவே இவ்வாறு அவர் மீது ஒழுக்காற்று நடைவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் வௌியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு தான் பீடைகொல்லி பதிவாளருக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.