யாழ்ப்பாணம் – கொக்குவில், தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவியையும் அவரது தந்தையை...
யாழ்ப்பாணம் – கொக்குவில், தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவியையும் அவரது தந்தையையும் மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தோடு கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பேருந்து இலக்கத்தகடு அற்றதோடு பாவனைக்கு உதவாத பேருந்து என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.