சிரேஷ்ட அமைச்சர்களுடனான அவசர சந்திப்பொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (14) அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று...
சிரேஷ்ட அமைச்சர்களுடனான அவசர சந்திப்பொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (14) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று (14) முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பினால் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடப்பதற்கான வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே, பிரதமர் இந்த சந்திப்புக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.