இலங்கை மின்சார துறைசார் தொழிற்சங்கங்கள் சுகவீன விடுமுறையினை அறிவித்து இன்று போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். மின்சார துறைச...
இலங்கை மின்சார துறைசார் தொழிற்சங்கங்கள் சுகவீன விடுமுறையினை அறிவித்து இன்று போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
மின்சார துறைசார் 15 தொழிற்சங்கங்கள் இணைந்து இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்தின் முன்னாள் இவ்வாறு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அத்தியட்சகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை கடினமாக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அத்தியட்சகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை கடினமாக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.